»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Saturday, October 30, 2010

லட்சுமி வந்தாச்சு -தீபாவளிஎன்றாலே ஒரே கொண்டாட்டம் தானே !


"தீபாவளி என்றதுமே நம் நினைவுக்கு வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும் மற்றும் சுவையான இனிப்புகளும்." ஆம், காலங்கள் மாறியவண்ணம் இருந்தாலும் பண்டிகை கொண்டாட்டகளும் மாறாத வண்ணம் உள்ளதால் மனதுக்கு ஒரு சந்தோஷம் . இதோ , இந்த சிறப்பு மிக்க தீவாளி பற்றி ஒரு தொகுப்பு .

"தீபாவளி, ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து சமயம்" இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும்சமணர்களும் , ஏன் கிரஷ்துவர் ,முசில்ம் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

இந்துக்களின் தீபாவளி

இந்துக்கள்
திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
  • இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
  • கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான்இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டவரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
என்று பற்பல காரணங்கள் உண்டு .
கொண்டாடும் முறை
காண்போம் :: தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (ஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில்கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில்மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர்.
அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

எனவே நாமும் இந்த சிறப்பு மிக்க பண்டிகையை சந்தோசமாக கொண்டாடுவோம் .

உங்கள் கருத்துக்களை எழுதவும் ..............
Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !