»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Thursday, June 2, 2011

புகைபடங்களே ஒரு அலாதியான விஷயம்

ஹாய் நண்பர்களே நான் வந்துட்டேன் ! 
                    இப்போது தான் நேரம் கிடைத்தது  உடனே  உங்களுடன். புகைபடங்களே ஒரு அலாதியான விஷயம் தான், அதிலும் விசித்திரமான ஒன்று இருந்தால். அப்படி ஒரு சில உங்களக்குகாக, படத்தை வேகமாக எடுத்திருந்தால் எப்படி இருக்கும். இதோ! பார்த்துவிட்டு விமர்சங்களை எழுந்துகள்.... உங்களக்குகாக சிறப்பு ஒன்று உண்டு .......
















Wednesday, April 13, 2011

சித்திரை நல்வாழ்த்துக்கள்!

 இதோ வந்துட்டேன். வேலை பழு காரணமாக தொடர்ந்து என்னால் பதிவை போட இயலவில்லை. இப்போது தான் நேரம் கிடைத்தது  உடனே  உங்களுடன்.

            அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரை நல்வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டும் சந்தோசமாக கொண்டாட இருக்கின்றனர். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் பிரார்த்தனை.
         இந்தியாவில் க்ரக்கேரியன் (Gregorian) காலண்டருடன், இந்து பஞ்சாங்கமும் அனேக விசேஷங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இப்பஞ்சாங்கப்படி, ஏப்ரல் மாதத்தின் நடுவில் 13, 14 ந்தேதியில் வருவதே சித்திரை வருடப் பிறப்பு. சித்திரை மாதம்  தொடங்கியே 12 மாதங்களை வரிசையாகக் கணக்கிடுகின்றனர் தமிழர்கள். 
இந்துக்கள் குறிப்பாக தமிழர்கள் அன்றைய தினம் வீட்டை சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வண்ணக்கோலமிட்டு,வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டிக் கொண்டாடுவர். புத்தாடைகள் உடுத்தி, பெரியோர்களிடம் ஆசி பெற்று மகிழ்வர். மேலும், மாங்காய்ப் பச்சடி செய்து வடை,பருப்பு பாயஸத்துடன் உண்டு மகிழ்வர். வாழ்வில் இனிப்பும், கசப்பும் மாறி மாறி வரும், அதனைத் துணிவோடு எதிர்கொண்டு ஜெயிக்கவேண்டும் என்பதனை உணர்த்தவே இந்த ‘மாங்காய்ப் பச்சடி” வழக்கம் என்பர் பெரியோர்.(வெல்லம், மாங்காய், வேப்பம்பூ சேர்த்துச் செய்யும் ஒருவகை இனிப்பு.

இவ்வினிய புத்தாண்டில் கனவுகள் நினைவாகி வாழ்வு மேம்பட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

Tuesday, March 8, 2011

:: இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ::


" மங்கையராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் அம்மா "

 என்ற கவிஞனின் எண்ணதிற்கு உருவம் கொடுத்து வருகின்றனர்  இன்றைய
பெண்கள்.  உலகின் மிகப்பெரிய பதவிகளையும் பொறுப்புகளையும்  இன்னும் 
பல்வேறு சாதனைகளும் வகித்து வருகின்றனர். மிகவும்  பெருமையாகவே உள்ளது.

              ஆணுக்கு  பெண் என்றும் குறைந்தவள் அல்ல என்று எல்லாத் துறைகளிலும் மகளிரின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.


                          இந்நன்னாளில்   குடும்ப முதல் கிராமம், நகரம்,நாடு , ஏன் உலகமே பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்போம். பெண்ணின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.

                    இறுதியாக, ஆண்களும் பெண்களும் இணைந்ததுதான் சமுதாயம். அதில் இருபாலாருடைய காத்திரமான பங்களிப்பும் இன்றியமையாதது. பெண் என்பதாலேயே அவள் இரண்டாம் பாலினமாக நோக்கப்படும் கருத்துநிலை படிப்படியாக மாற்றப்படும்போது, பெண்களின் நிலைமை மேம்பாடு அடையும் என்பதில் ஐயமில்லை.பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற, பெண்களும் சிறப்பானதொரு மனித உயிரியாக மதிக்கப்படும் புதியதோர் உலகை உருவாக்குவதில் நாமும் நம்முடைய கரங்களை இணைத்துக் கொள்வோம்! ஒற்றுமையின் பலத்தினால் வெல்வோம்! 


               பெண்ணாக பிறந்தற்கு நான் என்றும் பெருமை அடைகிறேன்.

நீங்க உங்க vote eh  எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் .........



Thursday, March 3, 2011

::மௌனத்திற்கு மொழியேது ::

      இன்று நான் மெளனமாக இருந்தேன் என்னுள் பல எண்ணங்களை மௌன நிலை சமர்ப்பித்தது . என் மௌனத்தின் மூலம் இந்த பதிவை பகிர்கிறேன்...... ஆனால் மௌனத்திற்கு ஏது மொழி.
                       இருக்கு என்று சொன்னால் நம்புவீர்களா !
(மௌனமென்றால் என்ன? வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம் என்று சொல்லலாம். உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மௌனமாக இருக்கிறோம்.)
         விடியலுக்கு முன்னே விழி திறந்து..... என்னோடு கைகோர்த்து நடை பழகும் சில நினைவுகளும் என் கட்டில் வரை வந்து கண் இமைகள் மூடும் முன்னே இமை திறக்கும் சில கனவுகளும் என் வாழ்வின் அன்றாட அம்சங்களாகி விடும்போது என் மௌனம் மௌனமாகிறது.
        மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.
        இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.
         ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.
                         எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?
       நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
     போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.
     அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.
 என்ன நீங்களும் இதை ட்ரை பண்ணலாமே ! மௌனம் ஒரு வித காதல்...ஆம் ....

Thursday, February 24, 2011

சுலபமாக லோகோக்களை உருவாக்கலாம் வாங்க !

                      
             லோகோ என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும் மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். 
                         இந்த லோகோக்களை உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

                        இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.

Friday, February 18, 2011

::விசித்திரமான மிகச்சிறிய கையடக்க பிரிண்டர்::

                 தற்கால தொழில்நுட்பத்தை பொறுத்த வரையில் புதிய உபகரணங்கள் வெகுவாகவே அறிமுகப்படுத்தப்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே.
                நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் Printer technology யின் ஓர் புதிய பரிமானமாக இதை குறிப்பிடலாம். நாம் Printer ஒன்றை தெரிவு செய்யும் போது குறிப்பாக கவனிப்பது சிறந்த தரம்(Quality), வேகம்(Speed), பருமன்(Size) மற்றும் Background noise level ஆகியவையே.
                     அவ்வகையில் Printbrush என அழைக்கப்படும் இந்த பிரிண்டரானது ஓரு வித்தியாசமான, விசித்திரமான பிரிண்டர் ஆகும். 

Monday, February 14, 2011

மைக்ரோசாப்ட் எச்சரிக்கையிட்டுள்ளது! 

இன்டர்நெட்     எக்ஸ்ப்ளோரர் எனும் 
உலாவியை    பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு      ஆபத்து ஏற்பட்டுள்ளதாக   மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
             
            புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

                 
           இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

                   வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  ----------------------------------**************************************------------------------------------------

நீங்க உங்க vote eh  எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் .........

      

Friday, February 4, 2011

புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல்  பெண்ணே  அல்ல ஒரு ஆண்  கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்

       வணக்கம்!  ஓவியம் காண்பதில் எல்லோருக்கும் அலாதி ரசனை ண்டு. எனக்கும்  உண்டு, அப்படி எண்ணுகையில் இந்த தகவல் அறிந்தேன். பகிர்தேன் உங்களுடன்.

  புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவியத்தை புகழ் பெற்ற ஓவியர் லியோ நார்டோ டாவின்சி வரைந்தார். கடந்த 1490-ம் அண்டு இந்த ஓவியத்தை அவர் வரைந்தார். பிரான்சை சேர்ந்த பட்டு வியாபாரி லிசா செரா டினி என்பவரின் மனைவி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார் என்று கூறப்பட்டது    
      ஆனால்,
  உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடி என்பவர் தெரிவித்துள்ளார்.

  கவிஞர்கள் அழகிய பெண்களை வாழும் மோனாலிசா என்று வர்ணிப்பதுண்டு. ஆனால், இனி அவ்வாறு கூற முடியாது. காரணம் லியோ நார்டோ டாவின்சி தனது உதவியாளராக இருந்த காப்ரோட்டி என்பவரை மாடலாக வைத்து தான் மோனாலிசாவை வரைந்துள்ளார்.

Tuesday, February 1, 2011

இணையத்திலே புகைப்படங்களை எளிதாக மாற்றலாம்

                          இணையத்தில் பரவிக்கிடக்கின்றது பல தரப்பட்ட மென்பொருள்கள்.  எல்லாமே இலவசம் ஆகிக் கொண்டு வருகிறது. இதில் மென்பொருள் மட்டும் விலக்கல்ல. அதிலும் இது ஒரு புது புரட்சி. அனைவரும் Photoshop என்ற மென்பொருள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது இலவசம் கிடையாது மேலும் இதை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே உங்களால் உபயோகப்படுத்த முடியும்.  இனி, இதற்காக வருந்த    அவசியம் இல்லை .
                     புகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம். அனைவருக்கும் பிரயோகமாக இருக்கும.மென்பொருளே இல்லாமல் இப்பொழுது உங்களால் புகைப்படத்தை உருவாக்கவோ மாற்றி அமைக்கவோ முடியும். இதற்கு தேவையானது உங்கள் கணினி மற்றும் இணைய வசதி.

Saturday, January 29, 2011

Facebook உபயோகிக்பவரா :: எச்சரிக்கை

              வணக்கம்!  தலைப்பை பார்த்து பயப்பட தேவையில்லை.   இருப்பினும் நீங்கள் தான் உங்களுடைய Facebook Account'ஐ  உபயோகிப்பவரா அல்ல வேறொருவர் உபயோகிக்கின்றனரா என்று அறிய ஒரு வழி உள்ளது.

நீங்கள் அறிந்துரிப்பீர்கள்,

 "பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது" என்று.

Friday, January 28, 2011

சகியின் கவிதை : அன்புள்ள அன்னை

நான் கவிதை எழுதுவதுண்டு , அனால் ஏதோ சுமாராக எழுதுவேன் !
                    எனினும் இந்த கவிதை என் உள்ளதை மெள்ள வருடியது.
ஆம் , இந்த அழகிய ஓவியம் அதிலுள்ள அர்த்தத்தை உணர்த்தும்.

தலைப்பு அன்புள்ள அன்னை என்று கூறிவிட்டு இங்கு, நான் சொல்வது 
:: அன்னையின் படைப்பு  ::


அவளை    பார்க்கும்   போது
சொல்ல நினைக்கிறேன் !
   அவள்     சிரிக்கும்      போது    
சொல்ல நினைக்கிறேன் !
அவள் என்னை முத்தம் இடும் போது 
சொல்ல நினைக்கிறேன் !
அனால்,
என்னால் சொல்ல முடியவில்லை 
கடவுளே எனக்கு சீக்கிரம் பேசும்
சக்தியைகொடு அவளை 
அம்மா என்று அழைக்க ! 
                                                      ---- கருவில் குழந்தை  நினைத்தது .
என்னை பத்தி படிச்சுட்டு ஒன்னும் சொல்லாம போனீங்கனா இப்படித்தா அழுவ

குறிப்பு :
    இதில் தவறேதும் இருப்பின் இந்த சகியை மன்னிக்கவும் . மற்றப்படி பிடித்தால்  எனக்கு கருத்து கூறவும்.

Wednesday, January 26, 2011

குடியரசு தின வாழ்த்துகள்!

இந்திய குடியரசு தின வாழ்த்துகள்,







இந்த குடியரசுதினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்!!!!

நீங்க உங்க vote eh  எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் அவசியம் ! .......... 

Tuesday, January 25, 2011

::விண்வெளியில் தூசியின் அளவு இரட்டிப்பு::

          உலகின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டேன் செல்கிறது . பூமண்டலத்தின்  விண்வெளியில் தூசியின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 


              இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச் சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகிய வற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார். 


                மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கை யில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

              பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரி களிலும் சோதனை செய்து கூறியுள்ளார்.

              பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றையொன்று பல்வேறு இடைப்பட்ட அமைப்புகள் மூலம் பாதித்துக் கொள்பவை. பொதுவாக தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. இதனால் மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கரியமில வாயுவினால் ஏற்படும் புவிவெப்பமடைதல் நடவடிக்கை சற்றே குறைகிறது.

Sunday, January 23, 2011

ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம்

            ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை  இயக்க முடியுமா. ஏன் முடியாது இருக்கவே இருக்கு ஒரு அற்புதமான software  அது தான் Team Viewer.

            Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினியை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும். 

           இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
 

1.உபயோகப்படுத்த கட்டணம் இல்லை

(Free version)

 

2.மிகவும் சிறிய சாப்ட்வேர் (3.5 Mb)

 

3.இணைய வசதி தேவை “

மேலும் தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவும்






Friday, January 21, 2011

உலகின் அதிசயகளில் தாஜ்மஹாலுக்கே முதலிடம்!


::தாஜ் மகால்:: 
                      (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.

                  ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 அது வெறும்  Introduction தான் ,

ஒரு சந்தோஷமான  தகவல் என்னவென்றால் ,

         "உலகின் அதிசயகளில் தாஜ்மஹாலுக்கே முதலிடம் கிடைத்துள்ளது "

                               உலகில் புதிய ஏழு  உலக அதிசயங்களை தேர்வு செய்ய சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்னாட் வெப்பர் என்பவர் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

                             யுனஸ்கோ (UNESCO) அமைப்பும் வாக்கெடுப்பு மூலம் உலக அதிசயங்களை தேர்வு செய்ய கூடாது என கண்டனம் தெரிவித்தது. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. இணைய தளம் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்து 21 கட்டிடங்கள் மட்டும் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன. 

Thursday, January 20, 2011

மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

                        ஒரு நல்ல செய்தி உங்களக்கு , 


                      அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TROI கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

STEP 1:
                 முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.

STEP 2:
                இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.


STEP 3:
               தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.


STEP 4:
               அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.

  •      தற்போதைய மொபைல் எண்.
  •      தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.UPC code


STEP 5:
                   தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.


STEP 6:
                   அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100).


STEP 7:
                    உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.


STEP 8:
                  அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.


STEP 9:
                  இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள். என்ன சந்தொஷம் தானே .......

என்ன மொபைல் Numbera மாதபோரீன்களா சீக்கிரம் மாறுங்க !

Wednesday, January 19, 2011

விக்கிலீக்ஸ் வெளியிடப் போகும் சுவிஸ் வங்கிக் கணக்குப் பட்டியலில் இந்தியர்கள்!

                   சுவிஸ் வங்கிகளில் முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் போட்டு வைத்துள்ள பணம் குறித்த விவரங்களை விக்கிலீக்ஸ் வெளியிடப்போவதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

இதுவரை அமெரிக்க தூதரக ரகசியக் கடிதங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த விக்கிலீக்ஸ் தற்போது சுவிஸ் வங்கிக் கணக்குகள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளது.

அதன்படி இப்பொழுது ,
                விக்கிலீக்ஸ் வசம் கிடைத்துள்ள சுவிஸ் வங்கிகளில் பெரும் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் குறித்த பட்டியலில் இந்தியர்களின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அன்னா இன்வெஸ்ட்மென்ட்ஸ், அன்னபூர்ணா கன்வெர்டிபிள ஆகிய இரு இந்திய நிறுவனங்கள் குறித்த விவரம் இதில் இடம் பெற்றுள்ளது. அது தவிர இந்தியர்களான ஆசாத் அலி கான் மற்றும் அவரது மனைவி ஜாஹிதா அலி கான் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

ஜூலியஸ் பேயர் என்ற சுவிஸ் வங்கியின் முன்னாள் தலைவரான ருடால்ப் எல்மர், 2 சிடிக்களில் பேயர் வங்கியில் கணக்கு வைத்துள்ள பல்வேறு முக்கியஸ்தர்களின் விவரங்களை விக்கிலீக்ஸிடம் அளித்துள்ளார். அதில்தான் இந்த இந்தியப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஹெட்லைன்ஸ் டுடே டிவி இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. எல்மருடன் தொடர்பு கொண்டு அவரிடமிருந்து இந்த விவரங்களைப் பெற்றதாக ஹெட்லைன்ஸ், கூறியுள்ளது.

               இந்த பேட்டியின்போது சுவிஸ் வங்கிகளில் எப்படிப் பணத்தைப் போடுகிறார்கள், வங்கிக் கணக்குகள் எப்படி தொடங்கப்படுகின்றன. என்ன மாதிரியான முறையில் பணத்தை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ளார் எல்மர்.

Tuesday, January 18, 2011

உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம் 'வாட்சன்(WATSON)'!

நாம் பல தரப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏந்திரங்களை (ரோபோ) திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். சில ரோபோ செயல்பாடுகளை ஜப்பான் , சீன நாட்டு வல்லுநர்கள் செய்து காட்டுவதை செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவு ரோபோ IBM நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த 5 வருடங்களாக உழைத்து உருவாக்கப்பட்ட இந்த ரொபோவிற்கு வாட்சன் என்று பெயரிட்டுள்ளார்கள். வாட்சன் என்பவர் 1924′இல் IBM நிறுவனத்திற்கு உயிர் கொடுத்தவர். அவரின் நினைவாக இந்த அமைப்பு (System) அமைக்கப்பட்டுள்ளது.

சரி, வாட்சன் என்றல் என்ன என்பதை காண்போம் ?
                    எளிதில் புரியுமாறு சொல்ல வேண்டும் என்றால்.  ஒரு கணினி அதனிடம் நீங்கள் கேட்கும் எந்த ஒரு அறிவியல், கலை, வரலாறு, கணிதம், விண்வெளி, கதை, கவிதை, இலக்கியம் என எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் விரைவாக மற்றும் துளியமாக பதில் சொல்லும்.

                     உங்கள் கேள்விகளை TYPE செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களின் VOICE எந்த மாதிரியான உச்சரிப்பாக இருந்தாலும் அதை கவனித்து தன்னிடம் உள்ள தகவல்களில் இருந்து உங்களின் கேள்விக்கான பதிலை இது தரும்.
                      நான் மேற்சொன்ன தகவல் கேட்க எளிதாக இருக்கும்., இதோ இந்த கேள்வியைப் பாருங்கள்.,

Thursday, January 13, 2011

தை திருநாளாம் பொங்கல் தமிழர் பண்பாடு!

உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல்.




தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, கடந்த ஆண்டில் இருந்து தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் தைப் பொங்கல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.


`பொங்கல் பண்டிகை’ என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

பொங்கல் என்பதற்கு `பொங்கி வழிதல்’, `பொங்குதல்’ என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

 எங்க வீட்ல கூட பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கட்டியை வைத்து அவற்றில் புதிய பானைகளில் வெண்பொங்கலும், சர்க்கரை பொங்கலும் தனித்தனியே செய்து, சூரியனுக்குப் படைத்து வழிபடுறோம். பாருங்க போன வருஷம் கொண்டாடின சமயத்தில எடத்த போட்டோ ! சிட்டி ல  இந்தமாரி தான் கொண்டாடமுடியும் போல  .


சரி ! இப்ப மேட்டருக்கு வருவோம் ,

Tuesday, January 11, 2011

பொங்கல் ஸ்பெஷல்: மகத்துவம் நிறைந்த மஞ்சள் தான் !

             பொங்கல் ச்பெசியலில் முதல் நாம் மஞ்சள் மகத்துவத்தை அறிவோம் .


   மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். மஞ்சள் கிழங்கில் உள்ள மருத்துவப் பயன்களையும், அதன் மகத்துவத்தையும் பார்ப்போம். 

முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.

                இரண்டாவது வகையான கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் இதைச் சேர்த்து வருகிறார்கள்.

          மூன்றாவது ரகமான விரலி மஞ்சள்தான் சமையலறையின் முதற்பொருள்.       இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

               வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.     மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.

Monday, January 10, 2011

browser Pictures, Images and Photosஇருபது ஆண்டு காலத்தில் வந்த பிரபலமான பிரவுசர்கள்!

இணையம் என்பது ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்தின் தகவல் பரிமாற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த பட்டது  இருவது ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களின் பாவனைக்கென 1990 இல் Tim Berners-Lee என்பவரால் உருவான முதல் இணைய உலவி WorldWideWeb ஆகும்.

             அதன் பின்னர் உலாவிகளின்  வளர்ச்சி அதன் மூலம் இணைய உலகில் ஏற்பட்ட புரட்சி எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் தற்போது வெகுவாக பயன்படுத்தும் உலாவிகள் என்று பார்த்தால் நமக்கு தெரிந்தது Internet Explorer, Mozilla Firefox மற்றும் Google chrome ஆகும்.


              இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர்களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த இருபது ஆண்டு காலத்தில் வந்த சில பிரபலமான பிரவுசர்கள் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.

1.WorldWideWeb (1990):
                       உலகின் முதல் இன்டர்நெட் பிரவுசர். இன்றைய பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு கற்காலத்து மனிதன். கிராபிக்ஸ் எதுவும் இல்லாத குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டும் இயங்கிய பிரவுசர். ஆனால் இந்த பிரவுசரில் இருந்தபடியே இணைய தளப் பக்கங்களை எடிட் செய்திட முடிந்தது இதன் சிறப்பாக இருந்தது. 

 2.Viola WWW (1992):

                    யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய வகையில் வெளியான முதல் பிரவுசர். முதன் முதலாக, பார்த்த இணைய தளங்களுக்கு முன்னும் பின்னும் செல்வதற்கும், ஹோம் பக்கத்தை அணுகுவதற்கும் வசதிகள் தரப்பட்டன. ஸ்டைல் ஷிட், ஸ்கிரிப்டிங் லாங்குவேஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் அளிக்கப்பட்டன. 

 

3. Cello (1993):
                         விண்டோஸ் (பதிப்பு 3.0) இயக்கத்தில் செயல்படும் வகையில் உருவான முதல் பிரவுசர். இதனை உருவாக்கிய தாமஸ் புரூஸ், வழக்குரைஞர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இதன் மூலம் பெறுவதற்காக வடிவமைத்துத் தந்தார். பெற்ற தகவல்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் பார்மட்டிலேயே இருந்தன.


4. Lynx 2.0 (1993):
                        இது உலகின் இரண்டாவது பிரவுசர். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றுமே பெற முடிந்தது. இதனால் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கிய கம்ப்யூட்டர்களில் இது இயங்கியது. 1993 வரை இது பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது. டெக்ஸ்ட் மட்டும் தேவைப்பட்டவர்களால் அதிகம் நாடப்பட்டது. இன்றும் சிலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.


5. NCSA Mosaic 1.0 (1993):
                      மிக எளிமையான இயக்கத்திற்கு வழி வகுத்த முதல் பிரவுசர். இதனால் சாமானியர்களும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கியது. டெக்ஸ்ட் உள்ளாக படங்களையும் காட்டியது.


6. IBM WebExplorer (1994):

                  ஐ.பி.எம். நிறுவனம் இணைய உலாவித் தொகுப்புகளில் இந்த தொகுப்புடன் தான் நுழைந்தது. ஏற்கனவே மொசைக் அடிப்படையில் பிரவுசர்களை உருவாக்கியது. ஆனால், அது அந்நிறுவன கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் மட்டும் இயங்கியது. இது சிறப்பாகப் பேசப்பட்டாலும் குறிப்பிட்ட சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே இயங்கியதால், அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.


7. Netscape Navigator 1.0 (1994):
                        மொசைக் பிரவுசர் தயாரித்த வல்லுனர்கள் சிலர், அந்நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, தனியே ஒரு பிரவுசரை உருவாக்கினார்கள். அதுவே நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 1. இதன் எளிமை, வேகம் மக்களை அதிகமாகக் கவர்ந்ததனால், அதுவே பெரும்பாலானவர்களின் பிரவுசராக இடம் பெற்றது.


8.Microsoft Internet Explorer 1.0 (1995):
                      நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பிரவுசருக்குக் கிடைத்த புகழைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தானும் இந்த பிரிவில் இறங்கி, தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தந்தது. முதலில் அரைவேக்காடாக இருந்த இந்த பிரவுசர் நாளடைவில் மேம்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக இயங்குகிறது.

Saturday, January 8, 2011

பிரமிக்கத்தக்க வியப்பூட்டும் மிகப்பெரிய அதிசய குகை !

புதிய உலகம் என்றே கூறலாம் பிரமிக்கத்தக்க வியப்பூட்டும்  மிகப்பெரிய அதிசய குகை.
பல காலங்களாக வியட்நாமை மனம் கொள்ளை கொள்ளும் வனப்புடன் கூடிய குகைகளின் நாடாகத்தான் புவியியல் ஆய்வாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அவற்றில் பல குகைகளுக்குள் மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லை. தற்போது அங்கே உலகின் மிகப்பெரும் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஹேங் சன் தூங் எனப்படும் அக்குகை, ஒப்பீட்டளவில் மொத்த நியூயார்க் நகர மக்கள் தொகையினையும் கொள்ளளவாக கொள்ளகூடியது ஆகும்.

அன்னாமைட் மலைகளில் உள்ள அந்த பிரம்மாண்ட குகையினுள் பெரிய காடும் அதனூடே ஒரு ஆறும் ஓடுகிறது. இதற்கென அங்கேயே சுற்றி சுழலும் சிறு மேகக்கூட்டங்களும் உள்ளன. இந்தக் குகையின் முடிவு இன்னும் அறியப்படவில்லை. இதற்கு மலைநதி குகை என்று தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்ட குகை வியட்நாமின் மத்தியில் லாவோஸ் எல்லையினையும் சேர்ந்த நில அமைப்பில் உள்ள சுமார் 150 குகைகளின் பெரும் தொடரின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹோவர்ட் மற்றும் லிம்பர்ட் ஆகியோர் இந்த ஹேங் சன் தூங் குகைக்கு வந்த போது அதனுடைய மிகப்பெரும் பக்கசுவர் அவர்களால் தாண்ட இயலாததாக இருக்கவே, மீண்டும் இந்தக் குகையின் எல்லைகளை அளந்து கண்டுபிடிக்க தற்போது இதற்கு திரும்பி வந்துள்ளனர்.

பரந்து விரிந்து கிடக்கும் இந்த அற்புத பூமியில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் மனித தேடலுக்குக் காத்து கொண்டுள்ளதோ…


உங்கள் vote எனக்கு அவசியம் ! மற்றும் கருத்துக்களை சொல்லவும் .........



Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !