»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Friday, December 31, 2010

வருகின்ற வருடத்தை வரவேற்போமா வாங்க !

வணக்கம் நண்பர்களே! இனிய வருடத்தை ஆவலோடு வரவேற்க காத்திருகின்றோம்.

"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்!". இது சினிமாப் பாட்டு மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவமும் கூட.

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் நம்மை விட்டு ஒரு ஆயுள் ஆண்டு விடை பெறுகிறது. இது பலருக்கும் கவலையைக் கொடுத்தாலும், கடந்து போனதை நினைக்காமல் நாம் இனி கடக்கப் போவதை நினைத்து தொடர்ந்து நடை போடுவதே பாசிட்டிவ் மனப்பாங்கு. இந்த ஒரு ஆண்டில் நாம் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருப்போம். சில சாதனைகளையும் செய்திருப்போம்.
அந்த வகையி்ல் 2010ம் ஆண்டு விடை பெற்று விட்டது. அதில் பலவற்றை செய்ய மறந்திருப்போம், சிலவற்றை செய்ய முயன்றிருப்போம்.

மொத்தத்தில் பாதிக் கிணறுதான் தாண்டியிருப்போம்.

எந்த விஷயத்தைச் செய்தாலும் அதைத் திட்டமிட்டு செய்ய உறுதி எடுப்போம். ஒரு காரியத்தில் இறங்கும்போது அதை வெற்றிகரமாக முடிப்பது எப்படி என்ற திட்டமிடலோடு ஈடுபட்டால் நிச்சயம் வாகை சூடலாம்.

2010ல் செய்ய நினைத்ததை, செய்ய முடியாமல் போனதை இந்த ஆண்டில் சாதிக்க முற்படுவோம்.

எது வந்தால் வரட்டும், வருவதை எதிர்கொள்வோம் என்ற துணிச்சலோடு போராடுவோம்.

அது மட்டுமின்றி நாம் அனைவரும் கண்டிப்பாக மரம் அல்லது செடியாவது வளர்ப்போம் என்ற உறுதி கொள்வோம் .

சந்தோஷமான, இனிமையான ஆண்டாக, பூரண திருப்தியுடன் கூடிய சிறப்பான ஆண்டாக இது மலரட்டும், குதூகலம் கூடட்டும். உடலிலிருந்து கரைந்து கொண்டிருக்கும் இளமையை கருத்தில் கொள்ளாமல், உள்ளத்து இளமையைக் கூட்டி, வாழ்வில் இனிமை சேர்க்க 2011 அனைவருக்கும் உதவட்டும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


MUDTRAP.COM

Tuesday, December 28, 2010

ஏல‌க்கா‌யி‌ன் மரு‌த்துவ குண‌‌ங்க‌ள்!



ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

என்ன அன்பர்களே வாசித்துவிட்டு விமர்சனம் கொடுக்காமல் இருபதா...

Thursday, December 23, 2010

குதூகலத் தாத்தா பற்றி காண்போம்!..

கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்கு குதூகலம் தருபவர் இந்தகிறிஸ்துமஸ் தாத்தா.

கிறிஸ்துமஸ் தாத்தாவின் வெண்தாடி, குலுங்கும் தொப்பை, விடைத்த மூக்கு, அவர் அணிந்துள்ள உடைகள் குழந்தைகளுக்கு வேடிக்கை அளிப்பவை. உடலின்பல பகுதிகளில் மறைத்து வைத்திருக்கும் இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துபவர். எந்தக குழந்தையும் அவரிடம்ஏமாந்ததில்லை.

இந்தத் தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்.
முதன் முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயின்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். 4-ம்நூற்றாண்டைச் சேர்ந்த நிக்கோலஸ், பிஷப் பதவியில் இருந்தவர்.

குழந்தைகளிடம் அதிகம் பிரியம் கொண்டவர். அவரது கருணை உள்ளமும், தயாளகுணமும், குழந்தைகளிடம் கொண்டிருந்த பிரியமும் அவரை குழந்தைகளிடையேபிரபலமாக்கியது. அனைத்து குழந்தைகளும் அவரை நேசித்தனர்.

மறுமலர்ச்சி காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலங்களிலும் நிக்கோலஸ் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் அவற்றில் ஒன்றில்கூட அவர் சாண்டாகிளாஸ் என அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள குழந்தைகளுக்கு, 100 வருடங்களுக்கு முந்தைய சாண்டா கிளாஸ் தாத்தா குறித்து தெரியாது. அவரது அன்றைய உருவம் வித்தியாசமானது.அன்றும், இன்றும் மாறாதிருப்பது அவரது நீண்ட வெள்ளை தாடி மட்டும்தான்.

இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்துக்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லை. டிசம்பர் 6-ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ்பரிசுகளை கொடுப்பார்.

பழங்கள், சாக்லேட்டுகள், சிறு பொம்கைள் சிறு பொருட்களே பரிசாக வழங்கப்படும்.

16-ம் நூற்றாண்டில் சிலுவைப் போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயின்ட்நிக்கோலசின் பழக்கங்களை பின்பற்றி வந்தனர்.

மாலுமிகளை கப்பல் விபத்திலிருந்து காப்பாற்றியவர் செயின்ட் நிக்கோலஸ். டச்சுநாட்டிலிருந்து அமெரிக்கா வந்த கப்பலை விபத்திலிருந்து காப்பாற்றியவர் செயின்ட்நிக்கோலஸ். இதையொட்டி நியூயார்க் நகரில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுக்கு அவரதுபெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காதான் சாண்டாகிளாஸை பிரபலப்படுத்தியது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தகேலிச் சித்தரக்காரர் தாமஸ் நாஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்டவர் சாண்டாகிளாஸ்.1863-ம் ஆண்டு முதல் 1886-ம் ஆண்டுவரை கிறிஸ்துமஸ் பற்றிய படங்களைஹார்பர் என்ற வார இதழில் தாமஸ் தாமஸ் நாஸ்ட் வரைந்திருந்தார்.

இந்த படங்கள் 20 ஆண்டுகள்வரை பிரபலமாக இருந்தன. பின் சாண்டாகிளாசின்உருவம் தற்போது இருப்பது போல் சிறிது சிறிதாக குழந்தைகளை கவரும் வகையில்வித்தியாசமாக உருவாக்கப்பட்டது.

சாண்டாகிளாஸ் குண்டானவராக, வெள்ளைதாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன்,பல வண்ண உடை அணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார்.

சாண்டாகிளாஸ் குறித்து டாக்டர் மூர் எழுதிய புகழ் பெற்ற கவிதை இன்னும்அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது. நாஸ்ட் வரைந்த ஓவியங்களும் சாண்டாஎவ்வாறு வருடம் முழுவதும், பொம்மைகள் வடிவமைப்பது,குழந்தைகளின்பழக்கவழக்கங்கள் குறித்தும், அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவது குறித்துமேசெலவழித்தார் என விளக்குகிறது.
சான்டாகிளாசின் பெயரில் இன்றும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் நாளின்போதுபரிசுகள் வழங்கி குழந்தைகளை மகிழ்விக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

" நாமமும் குதூகலத் தாத்தாவோடு கொண்டாடுவோம் என்ன சரிதானே !"


உங்கள் கருத்துக்கள் மற்றும் vote போடவும் !


Wednesday, December 22, 2010

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

இதை எழுதியவர்யாரென்று தெரியவில்லை. நானும் கூகுள் மூலம் தேடினேன், கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இணையதளங்கள் இது வெளியாகி உள்ளது ஆனால் யாரால் எழுதப்பட்டது என்று எங்கும் குறிப்பிட படவில்லை.
அனுபவித்து எழுதப்பட்டுள்ளது.
தெரிந்தால் சொல்லுங்களேன் யார் எழுதியதென்று ?

" உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!".
1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.
உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!.

2.மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3.அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர்கள் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா?கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததை பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருபத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்து கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிக் களம்! எல்லாத் தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பில் கவனம் செலுத்தலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

இதை பின்பற்றினால் நமக்கு நல்லதுதானே ......
Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !