»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Friday, February 4, 2011

புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல்  பெண்ணே  அல்ல ஒரு ஆண்  கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்

       வணக்கம்!  ஓவியம் காண்பதில் எல்லோருக்கும் அலாதி ரசனை ண்டு. எனக்கும்  உண்டு, அப்படி எண்ணுகையில் இந்த தகவல் அறிந்தேன். பகிர்தேன் உங்களுடன்.

  புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவியத்தை புகழ் பெற்ற ஓவியர் லியோ நார்டோ டாவின்சி வரைந்தார். கடந்த 1490-ம் அண்டு இந்த ஓவியத்தை அவர் வரைந்தார். பிரான்சை சேர்ந்த பட்டு வியாபாரி லிசா செரா டினி என்பவரின் மனைவி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார் என்று கூறப்பட்டது    
      ஆனால்,
  உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடி என்பவர் தெரிவித்துள்ளார்.

  கவிஞர்கள் அழகிய பெண்களை வாழும் மோனாலிசா என்று வர்ணிப்பதுண்டு. ஆனால், இனி அவ்வாறு கூற முடியாது. காரணம் லியோ நார்டோ டாவின்சி தனது உதவியாளராக இருந்த காப்ரோட்டி என்பவரை மாடலாக வைத்து தான் மோனாலிசாவை வரைந்துள்ளார்.

Tuesday, February 1, 2011

இணையத்திலே புகைப்படங்களை எளிதாக மாற்றலாம்

                          இணையத்தில் பரவிக்கிடக்கின்றது பல தரப்பட்ட மென்பொருள்கள்.  எல்லாமே இலவசம் ஆகிக் கொண்டு வருகிறது. இதில் மென்பொருள் மட்டும் விலக்கல்ல. அதிலும் இது ஒரு புது புரட்சி. அனைவரும் Photoshop என்ற மென்பொருள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது இலவசம் கிடையாது மேலும் இதை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே உங்களால் உபயோகப்படுத்த முடியும்.  இனி, இதற்காக வருந்த    அவசியம் இல்லை .
                     புகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம். அனைவருக்கும் பிரயோகமாக இருக்கும.மென்பொருளே இல்லாமல் இப்பொழுது உங்களால் புகைப்படத்தை உருவாக்கவோ மாற்றி அமைக்கவோ முடியும். இதற்கு தேவையானது உங்கள் கணினி மற்றும் இணைய வசதி.

Saturday, January 29, 2011

Facebook உபயோகிக்பவரா :: எச்சரிக்கை

              வணக்கம்!  தலைப்பை பார்த்து பயப்பட தேவையில்லை.   இருப்பினும் நீங்கள் தான் உங்களுடைய Facebook Account'ஐ  உபயோகிப்பவரா அல்ல வேறொருவர் உபயோகிக்கின்றனரா என்று அறிய ஒரு வழி உள்ளது.

நீங்கள் அறிந்துரிப்பீர்கள்,

 "பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது" என்று.

Friday, January 28, 2011

சகியின் கவிதை : அன்புள்ள அன்னை

நான் கவிதை எழுதுவதுண்டு , அனால் ஏதோ சுமாராக எழுதுவேன் !
                    எனினும் இந்த கவிதை என் உள்ளதை மெள்ள வருடியது.
ஆம் , இந்த அழகிய ஓவியம் அதிலுள்ள அர்த்தத்தை உணர்த்தும்.

தலைப்பு அன்புள்ள அன்னை என்று கூறிவிட்டு இங்கு, நான் சொல்வது 
:: அன்னையின் படைப்பு  ::


அவளை    பார்க்கும்   போது
சொல்ல நினைக்கிறேன் !
   அவள்     சிரிக்கும்      போது    
சொல்ல நினைக்கிறேன் !
அவள் என்னை முத்தம் இடும் போது 
சொல்ல நினைக்கிறேன் !
அனால்,
என்னால் சொல்ல முடியவில்லை 
கடவுளே எனக்கு சீக்கிரம் பேசும்
சக்தியைகொடு அவளை 
அம்மா என்று அழைக்க ! 
                                                      ---- கருவில் குழந்தை  நினைத்தது .
என்னை பத்தி படிச்சுட்டு ஒன்னும் சொல்லாம போனீங்கனா இப்படித்தா அழுவ

குறிப்பு :
    இதில் தவறேதும் இருப்பின் இந்த சகியை மன்னிக்கவும் . மற்றப்படி பிடித்தால்  எனக்கு கருத்து கூறவும்.

Wednesday, January 26, 2011

குடியரசு தின வாழ்த்துகள்!

இந்திய குடியரசு தின வாழ்த்துகள்,







இந்த குடியரசுதினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்!!!!

நீங்க உங்க vote eh  எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் அவசியம் ! .......... 

Tuesday, January 25, 2011

::விண்வெளியில் தூசியின் அளவு இரட்டிப்பு::

          உலகின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டேன் செல்கிறது . பூமண்டலத்தின்  விண்வெளியில் தூசியின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 


              இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச் சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகிய வற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார். 


                மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கை யில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

              பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரி களிலும் சோதனை செய்து கூறியுள்ளார்.

              பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றையொன்று பல்வேறு இடைப்பட்ட அமைப்புகள் மூலம் பாதித்துக் கொள்பவை. பொதுவாக தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. இதனால் மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கரியமில வாயுவினால் ஏற்படும் புவிவெப்பமடைதல் நடவடிக்கை சற்றே குறைகிறது.

Sunday, January 23, 2011

ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம்

            ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை  இயக்க முடியுமா. ஏன் முடியாது இருக்கவே இருக்கு ஒரு அற்புதமான software  அது தான் Team Viewer.

            Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினியை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும். 

           இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
 

1.உபயோகப்படுத்த கட்டணம் இல்லை

(Free version)

 

2.மிகவும் சிறிய சாப்ட்வேர் (3.5 Mb)

 

3.இணைய வசதி தேவை “

மேலும் தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவும்






Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !